Wednesday, November 2, 2011

என்ன செய்தாய் என்னை....!!!!

நினைக்கும்
பொருளில்
எல்லாம்
உந்தன்
நினைவுகள் தானடா 

உச்சரிக்கும்
சொல்லில்
எல்லாம்
உந்தன்
பெயர்
ஓசை தானடா

சுவாசிக்கும்
காற்றில்
எல்லாம்
உந்தன்
வாசனை தானடா

நீ என்னுடன் தான் இருக்கிறார்
என்றாலும்
எனக்குள் என்னடா
இவ்வளவு
போராட்டம்

உன்னை
அன்றி
நாட்கள்
ஒவ்வொன்றும்
நரகமாய் கழிகின்றன

கண்களை
மூடினால் கூட
இமைகளுக்கு
நடுவில் நிற்கிறாய்

என்ன செய்வது என்று தெரியாமல் உன்னிடமே கேட்கிறேன்
என்ன செய்தாய் என்னை....!!!!

0 comments:

Post a Comment