Saturday, September 28, 2013

ஒருநாள் வரும்
அந்த நாளின் முடிவிலும்
இன்னொரு நாள் வரும்
இதில் எந்த நாளை நான்
எனக்கானதாய் எடுத்துக்கொள்ள போகிறேன்....

ஒரு நாள் கட்டாயம் வரும்....
பிரிதொரு நாளில் 
நீ கேட்கும் மன்னிப்புக்காய்
நான் இன்றே மன்னிக்க துவங்கி விட்டேன்....

காதலிக்கவும்........

Tuesday, September 10, 2013

காதல் கவிதைகள் எழுதுபவர்கள் எப்போதும் 
காதலித்துக்கொண்டே இருப்பார்கள் என்றல்ல!

Tuesday, September 3, 2013

அழுவதற்கும் தொழுவதற்கும் 
ஆறாய் திறந்துவிட்டு...
ஆனந்தப்படும் போது மட்டும் 
அவசரம் அவசரமாய் துடைத்து எறிகிறோம் கண்ணீரை!
சிக்கித்தவித்த மீள இயலா 
பேரிரைச்சலினின்று மீட்டெடுக்கிறது எழுத்து!
சொப்பனங்களின் கடைசி நிமிட பதற்றமோ, 
இன்பமோ இமைகள் முத்தமிட்டுக்கொள்ளும்வரை மட்டுமே!
நட்பாய் மாறிய காதலை வைத்துக்கொண்டு 
புன்னகையை தேடிக்கொண்டிருக்கிறாய் நீ, 
மழை தேடும் பிளவு பட்ட நிலம் போல!