Wednesday, November 2, 2011

உன் முகம்

வெற்று சுவரிலும் 
உன் முகம் ,
நினைக்கும்போதே 
எட்டி பார்க்கும் 
கண்ணீர் துளின் முகம் ..
எப்பொழுதும் உன்னை நினைத்திருப்பேன் ,
எப்பொழுதாவது என்னை நீ 
நினைக்க மாட்டாயா ! என்று .

மழை...

மழையும் கூட
காதலை போலவே
எதிர்பாராத நேரத்தில்
கொட்டி நம்மை
நனைத்து விடுகிறது.....

என்னுயிரே.......



என்னுயிரே.......
நீரில் நீந்தும் மீனும்
நீ இல்லாத நானும்
இந்த உலகில்
ஒரு சின்ன வேற்றுமையால்
வேறுபடுகிறோம்.
என்ன வித்தியாசமென்று
உனக்கு சொல்கிறேன்... கேள்......
மீன்கள் தண்ணீரில் வாழ்கிறது...
நான் கண்ணீரில் வாழ்கிறேன்......

என்ன செய்தாய் என்னை....!!!!

நினைக்கும்
பொருளில்
எல்லாம்
உந்தன்
நினைவுகள் தானடா 

உச்சரிக்கும்
சொல்லில்
எல்லாம்
உந்தன்
பெயர்
ஓசை தானடா

சுவாசிக்கும்
காற்றில்
எல்லாம்
உந்தன்
வாசனை தானடா

நீ என்னுடன் தான் இருக்கிறார்
என்றாலும்
எனக்குள் என்னடா
இவ்வளவு
போராட்டம்

உன்னை
அன்றி
நாட்கள்
ஒவ்வொன்றும்
நரகமாய் கழிகின்றன

கண்களை
மூடினால் கூட
இமைகளுக்கு
நடுவில் நிற்கிறாய்

என்ன செய்வது என்று தெரியாமல் உன்னிடமே கேட்கிறேன்
என்ன செய்தாய் என்னை....!!!!

பூ

பூ
உதிர்வதாலும்
பூகம்பம் வரும்
என்பது காதலிக்கும்
வரை
தெரியாது..♥